தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விடுதி வசதிகளை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுதிகளுக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வைரஸ் காய்ச்சலொன்று மாணவர்களிடையே பரவி வருவதாக தெரிவித்து கடந்த 08 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.