நடைபவனியில் கலந்துகொள்ளும் கட்சிஉறுப்பினர்களுக்கு – ஸ்ரீ ல.சு.க சிவப்பு சமிஞ்சை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி கட்சியின் பெயரைப் பயன்படுத்தி நடைபவனி நடாத்துவது சட்டவிரோதமானது எனவும் இவ்வாறு நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் கட்சி உறுப்பினர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை எதிர்வரும் நாட்களில் கண்டுகொள்ள முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்