பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடத்திற்கு மட்டும் ரூ.2 கோடி

பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடம் தயாரிப்பதற்கு இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா கோரப்பட்டுள்ளதாக, இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகச் சீரமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழு கடந்த மார்ச்17ம் திகதி பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டது.

இந்தக் குழுவினர், பலாலி விமான நிலையத்தின் சீரமைப்புத் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்வதற்கு, வரைபடம் தயாரிப்பதற்கு ஓர் நிறுவனத்தை அணுகியுள்ளனர்.

பலாலியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான மாதிரி வரைபடங்கள்தயாரிப்பதற்கு மாத்திரம் இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா வரையில் செலவாகும்என்று தெரிவிக்கப்பட்டது.