பாகிஸ்தான் குவட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடிப்பொன்று பதிவாகியுள்ளது.
குவட்டா நகரில் உள்ள சிவில் மருத்துவமனையிலேயே குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து பாலுசிஸ்தான் பார் அசோசியேஷன்ஸ் தலைவர் பிலால் அன்வர் காசி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்தக் குண்டு வெடிப்பில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.