நிதி மோசடி விசாரணை பிரிவைக் கலைக்குமாறு மஹிந்த மனுத் தாக்கல்!

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைக்குள் ராஜபக்ச­ குடும்பம் சிக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைப் பிரிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த­ சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைப் பிரிவை உடன் கலைக்குமாறு கோரி மஹிந்த­வின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவால் நேற்றுக் காலை இந்த மனு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.