உடற்பாகங்களை தர்மம் செய்வதற்கு தேவையான புதிய முறைமை விரைவில் – ராஜித

அவசர அனர்த்தங்களின் போது உயிரிழக்கும் நபர்களின் உடற்பாகங்களை தர்மம் செய்வதற்கு தேவையான புதிய முறைமையொன்றை எதிர்வரும் நாட்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்

இதன்படி, தமது உடற்பாகங்களை வழங்குவதற்கான விருப்பம் தொடர்பான அம்சம் சாரதி அனுமதிப் பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.