கடந்த சில வருடங்களில், 15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தேசிய எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்து சென்ற வருடங்களின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் போது, தற்போது இந்த நிலைமை அதிகரித்திருக்கின்றமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதத்துடன், இலங்கையில் எச்.ஐ.வி. எயிட்ஸ் பரவிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 131 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.