இந்தியாவிற்கு புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரை செல்வொருக்கான விசா இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ஆர்.கே. சிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரதி இந்தியத்தூதுவர் ஆரிநாதம் பாக்சீ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஈசா ஸ்ரீவாத்வச ஆகியோரின்ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உயர்ஸ்தானிகர் ஆர்.கே.சிங்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா மீதான நல்லெண்ணத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவின் சுற்றுலா கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும்இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.