பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகிப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் தகுந்த சன்மானம் வழங்கப்படவுள்ளது.
குறித்த வர்த்தகரின் தந்தையார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரைக் கடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்படும் என கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின் 077 010 1971 என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறும் கோரப்பட்டுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.