ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகை.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி, பிரதமர் உட்பட மற்றும் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.