இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் திஸர பெரேரா மற்றும் ஆஸி வீரர் மைக்கல் ஸ்ராக் இருவரும் விளையாட்டு விதியை மீறியமைக்கு அபராதமாக இருவருக்கும் கிடைக்கும் ஊதியத்தில் 15 வீதத் தொகையைச் செலுத்த வேண்டுமென ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் வோர்னரின் விக்கட்டை வீழ்த்திய பெரேரா உபயோகித்த மொழியும், உடல் அசைவுகளும் துடுப்பாட்ட வீரருக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததே அவர் செய்த குற்றமாகும்.
இலங்கைத் துடுப்பாட்ட வீரர் சந்திமால் ஓட முயற்சிக்காமல் விக்கட்டுகள் அருகே நின்றபோது அவரை நோக்கி பந்தை வீசியது ஸ்டார்க் செய்த குற்றமாகும்.