ரிஷாத் லங்காதீப செய்தித்தாளுக்கு எதிராக ரூ.பில்லியன் வந்தி கோருகிறார்..

‘அரிசி உபயோகத்திலிருக்கும் போது பொன்னி சம்பா மெற்றிக் டொன் 98,375 இறக்குமதி செய்து 500கோடி அரசுக்கு நட்டபடுத்திய அமைச்சர் ரிஷாத் 29ம் திகதி ஆணைக்குழு முன்னிலையில்’ எனும் 2016.08.19ம் திகதி லங்காதீப பத்திரிகையில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகிய செய்தியானது அமைச்சர் ரிஷாத் பதுர்தீனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளதாகவும் அதற்காக லங்காதீப ஆசிரியருக்கு எதிராக ஒரு கோடி நஷ்டஈடு கோரி சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் (Letter of Demand) ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.