இலங்கை அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியின் போது, உபாதைக்கு உள்ளாகிய இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இறுதி ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளிலிருந்து விலகுவதாக உபதலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
போட்டியின் பிற்பாடு நேற்றைய ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்த சந்திமால், மேத்யூஸ் இனது இடத்திற்கு அனேகமாக உபுல் தரங்க உள்வாங்கப்படுவார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரைத் தவிர இறுதிப் போட்டிகளுக்காக நிரோஷன் திக்வெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.