சீனியின் அளவு அதிகரிக்குமாயின் வரியின் அளவும் அதிகரிக்கும்..

குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவுக்கேற்ப, வரி அளவிடுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வரி அளவீட்டு முறையை, இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதன் ஊடாக, தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களின் 69ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.