மருந்துப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான விலை சூத்திரத்தை அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அதன்படி, விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தி அதனை விவாதத்துக்குட்படுத்தி அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இதன் பூரண வேலைத்திட்டத்தை இம்மாதம் நிறைவடைவதற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.