ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வசீம் தாஜூதினின் காணாமல் போன உடற்பாகங்கள் தொடர்பில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, தனக்கு முன் பிணை வழங்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த முன் பிணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, முன்பிணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.