20ம் சட்ட திருத்தம் தொடர்பான தேர்தல் முறைமை திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று தமக்கு கிடைக்கப்பெறும் என அரச பதிப்பகம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவென 20ம் திருத்தச் சட்டமூல ஆவணம் கடந்த வாரம் பதிப்புக்கு வர இருந்த நிலையில் இன்றே கிடைக்கப்பெறவுள்ளதாக அரச பதிப்பகம் கூறியுள்ளது.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்டமூல ஆவணம் சென்று அங்கு மாற்றங்கள் செய்த பின் பதிப்பகத்திற்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இன்று மாலைக்குள் சட்டமூலம் பதிப்புக்கு வரக்கூடும் என அரச பதிப்பக பொறுப்பாளர் காமினி பொன்சேகா மேலும் கூறினார்.