சர்வதேச தகவல் அறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்.

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு நாளை(28) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் குறித்த  இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

இதில் 200ற்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள்  கலந்து கொள்ளவுள்ளனர். நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது