அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களையும் உயர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது.
சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது.
சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிரூபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.