திருமணமாகாத தாய்க்கு பிறக்கும் குழந்தைகளின் பிறப்பினை பதிவு செய்ய புதிய நடைமுறை.

இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடை­மு­றை­யினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது.

இலங்­கையில் சிறுவர் பரம்­ப­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்குடன் பெற்­றோர் திரு­மணம் புரி­யாத சந்­தர்ப்­பத்தில் பிள்­ளையின் பிறப்பினை பதிவு செய்யும் போது தந்­தையின் பெயர் ‘தெரி­யாது’ என்­ப­தற்குப் பதிலாக தாய் மற்றும் தகப்பன் இரு­வ­ரி­னதும் விருப்­பத்தின் பேரில் தகப்­பனின் பெய­ரினை பிறப்­புச் சான்றிதழில் உட்­பு­குத்­து­வ­தற்கு சந்­தர்ப்பம் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பதிவாளர் நாய­கத்­ தி­ணைக்­க­ளத்தின் 07/2016ம் இலக்க சுற்று நிருபம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் பிறப்பு, இறப்புச் சட்­டத்தின் 21வது பிரி­வினால் சட்­ட­ரீ­தி­யாக திருமணமாகாத ஜோடி­க­ளுக்குப் பிறக்கும் பிள்­ளை­யி­னது பிறப்­பினை தகப்பனின் தகவல்களினை உட்புகுத்தி பதிவு செய்­வ­தற்­காக ஏற்­பா­டுகள் உள்ளன.

பிள்­ளையின் பிறப்­பினை பதிவு செய்­வ­தற்­காக பெற்­றோரின் விவாகச் சான்றிதழின் கட்­டா­ய­மான சான்­றாகக் காட்­டு­வ­தனால் இவ்­வா­றான பிள்ளைகளின் பிறப்­பினை பதிவு செய்­வ­தனை தவிர்ப்­ப­தற்கு அல்­லது தந்தையின் தக­வல்கள் இன்றி பதிவு செய்­வ­தற்கு இட­முள்­ளது.

ஆகை­யினால் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் பிள்­ளை­களின் பிறப்­பினை பதிவு செய்­வ­தற்கு வேண்­டுகோள் சமர்ப்­பிக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் தாயுடன் தகப்­ப­னையும் அழைப்­ப­தற்கு அனைத்­து­வித முயற்­சி­க­ளையும் மேற்கொள்ள வேண்டும். பெற்றோர் இரு­வரும் இதற்­காக தோற்­று­வதன் காரணமாக பிள்­ளையின் பிறப்புச் சான்­றி­த­ழுக்கு தகப்­பனின் தக­வல்­க­ளினை உட்­பு­குத்திப் பதிவு செய்­வ­தற்கு இயலும் என கட்டாயமாக பெற்­றோ­ருக்கு அறிவுறுத்த  வேண்டும்.

அதற்­கி­ணங்க பிறப்புச் சான்­றி­தழில் 10வது நிரலில் தாய் மற்றும் தந்­தையின் ஒப்பந்தத்தினை பெறு­வ­தோடு பிறப்­புச்­சான்­றி­தழின் 4 வது நிரலில் தகப்­பனின் தகவல்களை உட்­பு­குத்தி, 6 வது நிரலில் இல்லை என குறிப்­பிட்டு, 7 வது நிரலில் தாய்­வழி பாட்­டனின் தக­வல்­க­ளினை குறிப்­பிட்டு, 8 வது நிரலில் ‘தாய் இலங்கையில் பிறந்­தவர்’ என அல்­லது பொருத்­த­மான விதத்தில் தாய் வழிப்பூட்டனின் தகவல்களை குறிப்­பிட்டு 9 வது நிரலில் பெற்றோர் இருவரினதும் பெய­ரினைக் குறிப்­பிட்டு திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்­­வ­தற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக மாவட்ட பதிவாளர்களுக்கும், அனைத்து பிறப்பு, இறப்பு மற்றும் வைத்திய பதிவாளர்களுக்கும் பதிவாளர் நாயகம், ஈ.எம்.குணசேகர 07/2016ம் இலக்க சுற்று நிருபத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.