மின்சார கட்டணத்தினை அதிகரிக்க கோரிக்கை.

அனைத்து துறைகளிலும் கட்டண அதிகரிப்பை கோரி மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு 5%ல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி மின்சார சபையினால் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமார சிங்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் வருடம் மார்ச் 31ம் திகதி வரை இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பாரிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.