கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையின் புனரமைப்பு நடவடிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 மாத காலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த புனரமைப்பு நடவடிக்கை காரணமாக 200 இற்கும் அதிகமான விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 47 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிய வந்துள்ளது.