SAITM கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட உடற் பாகங்கள் DNA பரிசோதனைக்கு..

மாலபே தனியார் கல்லூரியான சைட்டம் கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட உடற் பாகங்களை DNA சோதனைக்கு உட்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.