நாடுமுழுவதும் நிலவும் கடும் வறட்சி மற்றும் நீரின் நுகர்வு அதிகரித்தமை காரணமாக நீர் விநியோகம் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.அன்ஸார் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை நீர் வழங்கல் சபையினால் 24 மணி நேரமும் நீர் விநியோகம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலவும் வறண்ட காலநிலையின் மத்தியில் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அரசாங்கம் மக்களிடம் மேலும் கோரியுள்ளது.