இலங்கையிலும் கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம்..

இலங்கையிலும் கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்திய தயாராகியுள்ளதாக அந்நாட்டு மின்சாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் பீ.கே.பூஜாரியை மேற்கோள் காட்டி இந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்ளூர் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.