வறட்சியான காலநிலை – 2ம் வருட சகல பீடங்களுக்கும் ஒரு வாரத்துக்கு விடுமுறை.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக ஊவா வெல்லஸ பல்கலைகழகத்தின்  இரண்டாவது வருட சகல பீடங்களையும் மூடிவிடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்துக்கு இவ்வாறு குறித்த பீடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சகல பீடங்களின் 1ம் மற்றும் 4ம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கை வழமைபோல நடைபெறும் எனவும் குறித்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.