கொள்ளைச் சம்பவம் ஒன்றில் 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது தப்பிச் சென்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.எம். பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.