கண்டி – தெல்தோட்டை – போபிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வயல் நிலம் ஒன்றில் நிலக்கீழாக தீப்பற்றிய சம்பவம் ஒன்று நேற்று(16) பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக புவியியல் அகழ்வாராய்ச்சு நிலையம் ஆய்வுப்பணிகளை ஆரம்பித்துள்ளது.
சில நாட்களாக குறித்த இந்த வயல் நிலம் அதிகம் வெப்பமடைந்து வருவதுடன், புகை மேல் எழுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பிரதேசத்தில் மழை பெய்த நிலையிலும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என மக்கள் மேலும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.