அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று(18) நடைபெறவுள்ளது.
சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் குறித்த இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் சுதந்திர கட்சியின் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான சுதந்திர கட்சியின் முன்மொழிவுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.