அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நிலவும் பனிமூட்டமே இதற்குக் காரணம் என பெருந்தெருக்கள் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.