இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமிப்பு..

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக, அதன் பிரதி பணிப்பாளரக இருந்த சுனேத்ரா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க கடந்த 17ம் திகதி பதவி விலகினார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி நேற்றையதினம்(19) ஏற்றுக் கொண்டதையடுத்து, இதன் அடிப்படையில் குறித்த இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.