கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முச்சக்கரவண்டிகள் சங்கத்தினரால் முறைப்பாடு…

உள்ளுராட்சி மன்றங்களால் சட்டவிரோதமாக எவ்வித விதிமுறைகளும் இன்றி முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

பொது போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் மேல் மாகாண சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு குறித்த முறைப்பாட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.