மட்டக்குளி – சுமித்புர பிரதேசத்தில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து உயிராபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் இன்று(31) அதிகாலை உயிரிந்துள்ளார்.
இதன்படி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.