மாலபே சைட்டம் (SAITM) தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது.
நாளை(02) முதல் நாடு தழுவிய ரீதியில் மேற்குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.