யாழ் பல்கலை விவகாரம் குறித்து இன்று விஷேட கலந்துரையாடல்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்ச்சைகள், மாணவர்களது மரணம் குறித்த விசாரணை தொடர்பில், இன்று ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்துடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்திச் செல்வதே இதன் நோக்கம் என அமைச்சர் சுவாமிநாதன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.