தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(17) காலை முதல் அதிக பனி மூட்டமான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிகவேக வீதியின் தொடங்கொடையில் இருந்து கெலதிகம வரையிலும், கொட்டாவ பகுதி பிரதேசத்திலும் இவ்வாறு பனி மூட்டம் காணப்படுகிறது.
வீதி பனி மூட்டத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அதிவேக வீதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.