ஜனாதிபதி மற்றும் பிரதமரது அருகில் வருவதற்கு முயற்சித்த சப்புமல்’ளுக்கு பிணை.

பண்டித் டபிள்யு. டீ அமரதேவவின் இறுதிக்கிரியையின் போது, சந்தேகப்படும் விதத்தில் நடந்துக்கொண்ட, ஊடகவியலாளர் என்று கூறப்படும் நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோரின் அருகில் வருவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சப்புமல் தேவிந்த குமார என்னும் நபருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணைியில் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இந்த உத்தரவை இன்று(17) பிறப்பித்துள்ளார்.