இன்னும் சில மாதங்களில் நாடு எதிர்பார்க்காதளவு மிகப்பாரிய அபிவிருத்திகளில் முன்செல்லும் என தான் எதிர்பார்ப்பதாக திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பலர் மாற்று கருத்துக்களை தெரிவித்தபோதிலும் அவை உண்மையில்லை எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும், சிறு வேலைத்திட்டங்களுடன் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடரவுள்ளதுடன் எதிர்வரும் மாதங்களில் பாரிய அபிருத்தித் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.