பெண்களுக்கான ஆசிய கிண்ணம் 2016 கிரிக்கெட் போட்டிகள் தாய்லாந்தில் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகிறது.
இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அணித்தலைவியாக ஹசினி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அணி தேர்வாளர்களின் முடிவின் படி இலங்கை அணிக்கு பயிற்சியாளராக ஹேமனாத தேவப்ரியா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இடம் பெற்றுள்ள பலரும் சிறந்த ஆல்-ரவுண்டர்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீராங்கனைகள் விபரம் வருமாறு:
ஹசினி பெரேரா (அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி (உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா குமாரி, டினாலி மனோதரா, நிலக்ஷி சில்வா, நிபுனி ஹன்சிஹா, இநோக்கா ரணவீர, ஒசாடி ரணசிங்க, எசானி லொக்குசூரிய, யசோதா மெண்டிஸ், ஹன்சிமா கருணாரத்ன, அமா காஞ்சனா, உதேசிகா பிரபோதினி