இறுதிப் போட்டிக்கு உள்வாங்கப்பட்டது இலங்கை அணி.. (VIDEO)

சிம்பாப்வே, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் முக்கோண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற 5வது போட்டியில் இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி வகை சூடியது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் குறித்த இப்போட்டியில் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள், அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வி அடைந்தது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=D2KHzuNnpZI” width=”560″ height=”315″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=RHgFKupZMlU” width=”560″ height=”315″]