இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முக்கோணத் தொடரின் தீர்மானமிக்க போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
நேற்று முன்தினம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதனூடாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.