பாடசாலை ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் கற்பித்தல்களை மேற்கொள்ளும் பொருட்டு புதிய அனுமதிப் பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த பத்திரத்தினால் கல்வித்துறையில் நிகழும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(25) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.