இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால கருணைக் காலம்..

இடது பக்கமாக முன்னோக்கி செல்லும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றத்திற்காக ஒரு வருட கருணைக் காலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று(28) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சிற்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.