அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனக் கூட்டமும் அங்குரார்ப்பன நிகழ்வும் அண்மையில் குருநாகல் ‘’ரெட் ரோஸ்’’ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்திற்கான முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் நிர்வாகமும் அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இலங்கை பாராளுமன்றத்தின் ஆய்வாளர் அஜ்வாதீன் அவர்களால் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலை தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும், முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசிய தலைவர்,உப தலைவர், உறுப்பினர்களென பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.