குறுகிய தூர ரயில் சேவைகளுக்கும் விசேட பாதுகாப்பு.

குறுகிய தூர ரயில் சேவைகளுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ் புறக்கணிப்பினை தொடர்ந்து ரயில் சேவைகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. ஆதலால் ரயில் சேவைகளுக்கும் தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாலேயே குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.