கொழும்பு, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டு வந்த மிகப் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை நிர்மாணிப்பதற்காகச் செலவிடப்படும் நிதியை, மக்களுக்குப் பயன்படுத்துமாறு கிறிஸ்தவ அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனையொன்றை நிலைநாட்டும் பொருட்டே, இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



