உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளதாக நேற்று(20) நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
கொழும்பு மன்றக் கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுமார் 2 மணித்தியாலங்கள் இந்தக்கூட்டம் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.