மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது.
வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அதனை நிராகரித்ததாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறினார்.