அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ FCID முன்னிலையில் ஆஜர்..

கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக விவகார முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹபொல லொத்தரின் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொடுத்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்கவே அவர் நிதி ​மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.