துருக்கி நீதிமன்ற கட்டிடத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் ஒரு பொலிஸ் அதிகாரியும் மற்றுமோர் சிவில் அதிகாரியும் பலியாகியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த குண்டுத்தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் இருவர் அந்நாட்டு பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக துருக்கி, இஸ்தான்புல் நகரில் ஏற்பட்ட இரவு நேர களியாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 39பேர் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.